Thursday, May 5, 2011
சிரிக்கும் மலர்கள்
bogainvillea |
போகன் வில்லா
BOGAINVILLEA
இந்த மலர் பல வண்ணங்களில் கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்குவது கண் கொள்ளாக் காட்சி.
பல நாட்கள் வாடாமல் இருக்கும்.
கொடி போல் மரத்தில் ஏற்றி விட்டால் உயரே வண்ணமயமாய் சிரிப்பது மிகவும் ரசிக்கத்தக்கது.
-------------------------------------
ஜின்ஜர் லில்லி :
TORCH GINGER, GINGER LILY
லில்லி வகையில் இது ஒரு கண் கவரும் மலர்.
ரத்தச் சிவப்பில் அடுக்கடுக்கான இதழ்களுடன் கம்பீரமாய் ஒளிரும் இந்த மலர்களை முதல் முதலாய் குடகு மலைக்காடுகளில் ஒரு காபி எஸ்டேட்டில் பார்த்துப் பிரமித்தேன்.
பல படங்கள் எடுத்தும் அதன் முழு கம்பீரத்தை வெறும் புகைப்படங்களால் காட்ட முடியாது என்று தெரிந்தது. வேறு எங்கும் இந்த புஷ்பங்களை பார்க்க வில்லை.
லில்லி வகையில் இது ஒரு கண் கவரும் மலர்.
ரத்தச் சிவப்பில் அடுக்கடுக்கான இதழ்களுடன் கம்பீரமாய் ஒளிரும் இந்த மலர்களை முதல் முதலாய் குடகு மலைக்காடுகளில் ஒரு காபி எஸ்டேட்டில் பார்த்துப் பிரமித்தேன்.
பல படங்கள் எடுத்தும் அதன் முழு கம்பீரத்தை வெறும் புகைப்படங்களால் காட்ட முடியாது என்று தெரிந்தது. வேறு எங்கும் இந்த புஷ்பங்களை பார்க்க வில்லை.
CORAL JASMINE
Botanical name: NYCTANTHES ARBORTRISTIS
Family : JASMINE FAMILY
தமிழ் நாட்டில் எல்லா இடங்களீலும் வளரும் இந்த மரம் பூக்களைச் சொரியும். மென்மையாய் மணம் பரப்பி மகிழ வைக்கும்.
மாலை மலர்ந்து தோட்டம் முழுவதும் மணம்பரப்பும் உன்னத புஷ்பம். தென்னிந்திய வீடுகளில் பூஜையில் இடம் பெறும் மலர் இது. மனதுக்கு அமைதி தரும் மணம்.
தொட்டாலே வாடிவிடும் மென்மை.
பவழ நிறக்காம்பில் ஆறு அழகிய இதழ்கள் சேரும் அழகை ரசிக்க சில நொடிகள் போதுமா?
---------------------------------------கஜானியா
GAZANIA
Botanical name: GAZANIA RIGENS
Family : ASTERACEAE
கண்ணைக் கவரும் பல வண்ணஙகளில் பல டிசைன்களில் ஒரு கைதேர்ந்த ஒவியன் தீட்டிய வண்ணப் படங்கள் போல் மனதை அள்ளும் புஷ்பம் இது.
----------------------------------------
Common name: RANGOON CREEPER , BURMA CREEPER
Hindi name : MADHU MALATHI
Botanical name: QUISQUALIS INDICA
Family : COMBRETACEAE
கொத்துக் கொத்தாய்ப் பூத்து மணம் பரப்பி எல்லோரிடமும் நல்லபெயர் வாங்கும் பூ இது. வருடம் முழுவதும் பூத்துக் குலுங்கும். மென்மையாய் மாலையில் மலர்ந்து மணம் கமழும் நேர்த்தியும் வெள்ளையாய் மலர்ந்து காலை சூரிய ஒளி பட்டதும் இளம் சிவப்பாய் மாறி பிறகு ரத்தச் சிவப்புக்குத் தாவும் ஜாலமும் இந்த மலருக்கே உள்ள தனிச் சிறப்பு. பார்த்து ரசிக்க உகந்த மலர்.
-----------------------------------------
பத்ரிநாத் யாத்திரை சென்ற வழியில் நீல்கண்ட் என்ற பனி படர்ந்த மலை உச்சியில் சிரித்து வரவேற்ற இந்த புஷ்பம் என்னை மிகவும் கவர்ந்தது. என்ன அழகிய வண்ணம் ... எவ்வளவு பொலிவான தோற்றம். கொத்துக் கொத்தாய் சிரிக்கும் பாங்கு..... ஐயாயிரம் அடி உயரத்திலும், குளிரும் பனியும் தாக்கும் சூழலிலும் மலரும் தெய்வீக பூரிப்பு.
------------------------------------------------------------------------------------------
![]() |
himalayan blooms |
NASTURTIUM
-----------------------------------------------------------
நாஸ்டுர்ட்டியம்
சிவப்பிலும், மஞ்ஜளிலும், இரண்டும் கலந்த ஆரஞ்சு வண்ணத்திலும் கலகலவென்று பூத்துக் குலுங்கும் இந்த மலர்கள் வெளிர்பச்சை இலைகளின் மத்தியில் எட்டிப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சி.
![]() |
sunflowers |
சூரிய காந்தி
Common name : SUNFLOWER
Botanical name : HELIANTHUS ANNUUS
Family : ASTERACEAE [ SUNFLOWER FAMILY]
வயல்களில் நெடுந்தூரத்துக்குப் பயிரிட்டு சூரியகாந்தி மலரும் போது ஒரே உயரமாய் அசைந்தாடும் நேர்த்தியும் ஒய்யாரமும் வர்ணிக்க முடியாதவை.
சூரியகாந்திப் பூவைப் பார்த்தால் அதன் நடுவே விதைகள் அமைந்திருக்கும் வடிவமைப்பு பிரமிப்பூட்டும். இவ்வளவு அழகாக வளைகோடுகள் ஒன்றை ஒன்று அணைத்துப் பிணைந்து விரிவடையும் பாங்கினை வர்ணிக்க வார்த்தைகள் ஏது?
Labels:
bogainvillea,
fantastic flowers,
laughing flowers
Thursday, October 1, 2009
ஆர்கிட்

Poonjeri, Chennai ,India
ஆர்கிட் :
உஷ்ணப் பிரதேசங்களில் காடுகளில் அபரிதமாய்ப் பூக்கும் இந்த மலர்களை இப்போது greenhouse எனப்படும் கூண்டுப் பண்ணைகளில் மலர வைத்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான வகைகள், வண்ணங்கள், கோலங்கள். இது ஒரு தனி உலகம்.
உஷ்ணப் பிரதேசங்களில் காடுகளில் அபரிதமாய்ப் பூக்கும் இந்த மலர்களை இப்போது greenhouse எனப்படும் கூண்டுப் பண்ணைகளில் மலர வைத்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான வகைகள், வண்ணங்கள், கோலங்கள். இது ஒரு தனி உலகம்.
இதன் சிரிப்பில் உள்ளத்தை பறிகொடுத்தோர் அநேகம்.
Wednesday, September 30, 2009
மலர்கள் சிரிக்குமா?
சிரிக்கும் மலர்கள்


ஒரு குழந்தை சிரிப்பதை பார்த்தால் யாராயிருந்தாலும் அப்படியே மனதைப் பறிகொடுத்து லயித்து விடுகிறோம்.
எந்த நாட்டுக் குழந்தையாய் இருந்தாலும் .....
மலர்களும் சிரிக்கும் குழந்தைகள் தான்.
அவை சிரிப்பதை ரசிக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்
எனது நாற்பது வருட பொறி இயல் சார்ந்த ஓட்டங்களில் உலகில் பல இடங்களில் என்னை கவர்ந்து நின்று ரசிக்க வைத்த மலர் சிரிப்புக்களில் சில வற்றை தொடுத்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
தலைப்புக்களோ , அவற்றின் தவரயியல் நாமகரணங்கள் போன்ற விவரங்களோ ஒரு கோப்புக்குத்தான்.
அவை முக்கியமல்ல.
இந்த மலர்களின் சிரிப்பில் தெய்வீகம் சிறிதளவாவது நம் மனதை நெருடுமானால் நாம் பாக்கிய சாலிகள்தான்.
பல கோடிக்கணக்கான மலர்கள் தினமும் மலர்கின்றன. சில மணக்கின்றன. பல ஜொலிக்கின்றன. பற்பல சிரிக்கின்றன.
இந்த சிரிப்புக்கள் அவ்வப்போதே அனுபவிக்க ஏற்பட்டவை.
எவ்வளவு முயன்றாலும் அவற்றை புகைப்படத்திலோ, டிஜிட்டல் ஓட்டத்திலோ கவர்வது ஓரளவு தான் சாத்தியம்.
மற்றவர்களுடன் நான் பெற்ற இந்த பாக்கியத்தை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அடுத்த முறை நீங்கள் மலர்களைப் பார்க்கும்போது உங்கள் மனதில் அவை சிரிப்பாய் மலரட்டும்.
Labels:
சிரிப்பு,
தெய்வீக சிரிப்பு,
பூக்கள்,
மலர்களின்சிரிப்பு,
மலர்கள்
Subscribe to:
Posts (Atom)