சிரிக்கும் மலர்கள்


ஒரு குழந்தை சிரிப்பதை பார்த்தால் யாராயிருந்தாலும் அப்படியே மனதைப் பறிகொடுத்து லயித்து விடுகிறோம்.
எந்த நாட்டுக் குழந்தையாய் இருந்தாலும் .....
மலர்களும் சிரிக்கும் குழந்தைகள் தான்.
அவை சிரிப்பதை ரசிக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்
எனது நாற்பது வருட பொறி இயல் சார்ந்த ஓட்டங்களில் உலகில் பல இடங்களில் என்னை கவர்ந்து நின்று ரசிக்க வைத்த மலர் சிரிப்புக்களில் சில வற்றை தொடுத்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
தலைப்புக்களோ , அவற்றின் தவரயியல் நாமகரணங்கள் போன்ற விவரங்களோ ஒரு கோப்புக்குத்தான்.
அவை முக்கியமல்ல.
இந்த மலர்களின் சிரிப்பில் தெய்வீகம் சிறிதளவாவது நம் மனதை நெருடுமானால் நாம் பாக்கிய சாலிகள்தான்.
பல கோடிக்கணக்கான மலர்கள் தினமும் மலர்கின்றன. சில மணக்கின்றன. பல ஜொலிக்கின்றன. பற்பல சிரிக்கின்றன.
இந்த சிரிப்புக்கள் அவ்வப்போதே அனுபவிக்க ஏற்பட்டவை.
எவ்வளவு முயன்றாலும் அவற்றை புகைப்படத்திலோ, டிஜிட்டல் ஓட்டத்திலோ கவர்வது ஓரளவு தான் சாத்தியம்.
மற்றவர்களுடன் நான் பெற்ற இந்த பாக்கியத்தை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அடுத்த முறை நீங்கள் மலர்களைப் பார்க்கும்போது உங்கள் மனதில் அவை சிரிப்பாய் மலரட்டும்.